Last Updated : 02 Nov, 2020 11:06 AM

 

Published : 02 Nov 2020 11:06 AM
Last Updated : 02 Nov 2020 11:06 AM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 82 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 92 சதவீதத்தை நெருங்குகின்றனர்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 லட்சத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் 92 சதவீதத்தை நெருங்குகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 45 ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 82 லட்சத்து 29ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை தரும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 75 லட்சத்து 44 ஆயிரத்து 798 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 91.68 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 61ஆயிரத்து 908 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 496 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 607ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 113 உயிரிழந்தனர். அதைத் தொடர்்ந்து மேற்கு வங்கத்தில் 59 பேர், டெல்லியில் 51 பேர், சத்தீஸ்கரில் 49 பேர், தமிழகத்தில் 30 பேர், கேரளாவில் 28 பேர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 11 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 103 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 800 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40ல லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x