Published : 01 Nov 2020 02:52 PM
Last Updated : 01 Nov 2020 02:52 PM

‘‘இயற்கை அழகால் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் கேரளா’’ - பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி

கேரள மாநிலத்தின் நிறுவன தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் கேரள மக்களுக்கு மாநில தின வாழ்த்துகள். தன் இயற்கை அழகால் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் தலமாக இந்த மாநிலம் விளங்குகிறது. கேரளாவின் இடையறாத வளர்ச்சிக்காக நான் பிரார்தித்துக் கொள்கிறேன்", என்று பிரதமர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x