Published : 28 Oct 2020 02:02 PM
Last Updated : 28 Oct 2020 02:02 PM

தொலைதூர மருத்துவ சேவை இ-சஞ்சீவனி: நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை 

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் 6 லட்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான (6,04,164) தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டு உள்ளன.

இவற்றில் ஒரு லட்சம் ஆலோசனைகள் கடந்த 15 நாட்களில் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரமும் இ-சஞ்சீவனி சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.

இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 6000-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் 217 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்குகிறது.

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசி செயலியை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 2,03,286 தொலைதூர ஆலோசனைகளும், உத்திரப் பிரதேசத்தில் 1,68,553 தொலைதூர ஆலோசனைகளும்
இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

மாவட்டங்களை பொருத்தவரையில், விழுப்புரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் இ-சஞ்சீவனி சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x