இந்தியாவில் கரோனா தொற்று 78 லட்சமாக அதிகரிப்பு: 70 லட்சத்துக்கும் அதிகமாக குணமடைந்தனர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியாவில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணி்க்கை தொடர்ந்து 3-வது நாளாக 55 ஆயிரத்துக்கும் கீழாகச் சென்றது. கடந்த 24 மணிநேரத்தில் 578 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 129 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 78 லட்சத்து 64ஆயிரத்து 811ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஊக்கம் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை70 லட்சத்து ஆயிரத்து 78 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 90 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 154 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 7-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 578 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.51 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 137 பேரும், கர்நாடகாவில் 52 பேரும், மேற்கு வங்கத்தில் 59 பேரும், தமிழகத்தில் 35 பேரும், சத்தீஸ்கரில் 55 பேரும், டெல்லியில் 36 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 10 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 469 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 40 ஆயிரத்து 915 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in