Published : 25 Oct 2020 07:20 AM
Last Updated : 25 Oct 2020 07:20 AM
ஹைதராபாத்: நாடு முழுவதும் வெங்காய விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், ஹைதராபாத் உழவர் சந்தைகளில்
ரூ.35-க்கு விற்பனை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு, சந்தைக்கு அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் காய்கறிகள் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படும் உழவர் சந்தைகளிலும் வெங்காய விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து மாநில அரசின் மானிய உதவியுடன் ரூ.35-க்கு வெங்காய விற்பனை நேற்று தொடங்கியது. அடையாள அட்டையை காண்பித்து ஒருவர் 2 கிலோ வரை வெங்காயம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.80 முதல் 100 வரை உயர்ந்துள்ளது. இதனால் உழவர் சந்தைகளில் ரூ.35-க்கு அரசு விநியோகம் செய்து வருகிறது. எனினும் சில நிமிடங்களில் இது விற்றுத் தீர்ந்து விடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT