Published : 23 Oct 2020 07:12 AM
Last Updated : 23 Oct 2020 07:12 AM
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று உற்சவரான மலையப்பர் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இம்முறை சுவாமியின் திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இதனால், கோயிலுக்குள்ளேயே உற்சவர் மலையப்ப சுவாமி தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வருகிறார். இந்நிலையில், 7-ம் நாளான நேற்று காலையில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளினார். பின்னர் இரவில் சந்திரபிரபை வாகன சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தேவஸ்தான ஜீயர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT