Published : 16 Oct 2015 08:08 AM
Last Updated : 16 Oct 2015 08:08 AM

மின்வாரிய அதிகாரிக்கு பார்சலில் வந்த பாம்பு

பெங்களூரு கிரீஸண்ட் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் ஏஞ்சலின் டி' சில்வா (40). இவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பார்சல் ஒன்று வந்துள்ளது.

அந்த பார்சலை டி'சில்வா பிரித்து பார்த்தபோது உயிருடன் இரண்டு பாம்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார்.

பார்சலில் இருந்த கடிதத்தில், “இந்த அலுவலகத்தில் பணியாற்றும் எனது மனைவியுடன் நெருங்கி பழகுவதை நிறுத்திக்கொள். இல்லாவிட்டால் கடுமை யான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முறை நாக‌ பாம்பை அனுப்பி இருக்கிறேன். அடுத்த முறை இதைவிட கொடிய விரியன் பாம்பை அனுப்பி வைப்பேன்''என எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஏஞ்சலின் டி'சில்வா ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், அலுவலகத் தில் பணியாற்றும் தேவி பிரசாத் என்பவர் அனுப்பி இருக்கலாம். அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x