Published : 20 Oct 2020 07:55 AM
Last Updated : 20 Oct 2020 07:55 AM
கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக கரோனா உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் தினசரி கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 99,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன்பின் கடந்த 5 வாரங்களாக தினசரி வைரஸ் தொற்று குறைந்து கொண்டே வருகிறது.
இந்த வரிசையில் நேற்று 55,722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி 53,610 பேருக்கும் கடந்த 13-ம் தேதி 55,342 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. இதேபோல நேற்றும் குறைவான வைரஸ் தொற்று பதிவானதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 75,50,273 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 66,63,608 பேர் குணமடைந்துள்ளனர். தேசியஅளவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 88.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 7,72,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழாக உள்ளது.
ஒரே நாளில் 579 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,14,610 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் முதல்முறையாக கரோனா உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் புதிதாக 9,060 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 15,95,381 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,69,810 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,456 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 42,155 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 3,986 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 7,83,132 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,40,229 பேர் குணமடைந்துள்ளனர். 36,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,429 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 7,012 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 7,65,586 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,45,825 பேர் குணமடைந்துள்ளனர். 1,09,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,478 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் புதிதாக 2,486 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. மாநிலத்தில் 4,55,146பேர் வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 4,15,592 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32,896 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 6,658 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் நேற்று 5,022 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 3,46,881 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,52,868 பேர் குணமடைந்துள்ளனர். 92,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,182 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT