Published : 18 Oct 2020 02:41 PM
Last Updated : 18 Oct 2020 02:41 PM

கரோனா தொற்று;  2-வது நாளாக பாதிப்பு  எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

புதுடெல்லி

இந்தியாவில் கரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 20000 க்கும் குறைவான தற்போதைய பாதிப்புகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. இரண்டாவது நாளாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக, 7,83,311ஆக பதிவாகியுள்ளது.

நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் இது வெறும் 10.45 சதவீதமாகும். மேலும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20000 க்கும் குறைவானோர் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 ஆயிரத்திலிருந்து 50,000 வரையிலான தற்போதைய பாதிப்புகளும், மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தற்போதைய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

நாட்டில் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 65,97,209 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயான இடைவெளி 58 லட்சத்தை தாண்டியுள்ளது (58,13,898). தேசிய அளவில் 88.03 சதவிகிதம் பேர் குணமடைந்திருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22614 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக 61871 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 79 சதவிகிதம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1033 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x