Published : 18 Oct 2020 08:02 AM
Last Updated : 18 Oct 2020 08:02 AM

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு இல்லை: ராணுவத்தினரின் அன்பான பேச்சால் தீவிரவாதி சரண்

 நகர்

காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே ஜஹாங்கீர் பட் என்ற தீவிரவாதி சரணடையும் காட்சியின் வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. மறைவிடம் ஒன்றில் ஜஹாங்கீர் பட்டை ராணுவத்தினர் சுற்றி வளைக்கின்றனர். அப்போது, ராணுவ வீரர் ஒருவர் ஜஹாங்கீரிடம் பேச்சு நடத்துகிறார். ‘ஜஹாங்கீர் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. யாரும் உங்களை சுடமாட்டார்கள். உங்கள் குடும்பத்தை நினைத்துப் பாருங்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள்’’ என்று கூறுகிறார்.

இதையடுத்து, தயக்கத்துடன் மறைவிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஜஹாங்கீர் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்து ராணுவத்திடம் சரணடைகிறார். அப்போது, ‘அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்’ என்று மற்ற வீரர்களிடம் ஒரு ராணுவ வீரர் சொல்கிறார். இந்த வீடியோகாட்சிகளை ராணுவம் வெளியிட்டது.

மேலும், ஜஹாங்கீரின் தந்தைதனது மகனை மீட்டுக் கொடுத்ததற்காக ராணுவத்தினரிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கும் மற்றொரு வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அன்பாகப் பேசியே தீவிரவாதி சரணடைந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x