Published : 16 Oct 2020 06:37 AM
Last Updated : 16 Oct 2020 06:37 AM

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இடஒதுக்கீடு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) இந்த ஆண்டில் இடஒதுக் கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இட ஒதுக்கீடு வழங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இதேபோல, மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மருத்துவ இடங்களை வழங்குகின்றன.

இந்த இடங்களில் 50 சத வீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தர விடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன.

இதை விசாரித்த உச்ச நீதிமன் றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என உத்தரவிட் டது. மேலும், இதுபற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்குமாறும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக் கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி, வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:

நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காமல், இதற்காக ஒரு குழுவை அமைத்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப் பது சரியல்ல. மேலும், மூத்த வழக் கறிஞர் பி.வில்சன் அளித்துள்ள ஆவணத்தின்படி, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைக்கு நாடாளுமன்றத்தில் மத் திய அரசு சம்மதம் தெரிவித்திருப் பது தெளிவாக தெரியவருகிறது. ஆகவே, இந்த ஆண்டே இடஒதுக் கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றம் அமைத்திருந்த குழுவின் கூட்டம் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள் ளப்பட்டது. மத்திய அரசு நிறுவனங் களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதை அகில இந்திய தொகுப்பு இடங் களுக்கு வழங்க முடியும். மாநிலத் துக்கு மாநிலம் இடஒதுக்கீடு பின் பற்றப்படும் முறை மாறுபடுவதால் இதை அமல்படுத்துவது மத்திய அரசுக்கு சிரமமாக இருக்கும். உதா ரணமாக, 50 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தடையாக உள்ளது. அதேவேளை யில், தமிழகத்தில் 1993-ம் ஆண்டு சட்டப்படி 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. ஆகவே, இதுகுறித்து உச்ச நீதி மன்றம் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மருத் துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா அல்லது இதுகுறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவீத மாவது கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசுகக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீட்டை 2020-21 கல்வியாண்டில் வழங்க முடியாது. இடஒதுக்கீட்டை அமல் படுத்த மேலும் அவகாசம் தேவைப் படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால் இடஒதுக் கீடு வழங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள தாகவும், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற் கொள்ள உள்ளதாகவும் மனுதாரர் கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடும் அதிருப்தி

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்பட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல நூறு மாணவர்களுக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் தற்போது இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x