Published : 15 Oct 2020 05:42 PM
Last Updated : 15 Oct 2020 05:42 PM

மருந்து தொழிலில் துர்க்மெனிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு

புதுடெல்லி

துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமெதொவ், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தொலைபேசி மூலம் இன்று தொடர்பு கொண்டார்.

வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கிடையேயான சுமூகமான நட்புறவை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். பல்வேறு துறைகளில் தொடர்ந்து நீடிக்கும் ஒத்துழைப்பை அவர்கள் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருக்கும் அதிக அளவிலான சாத்தியக்கூறுகளை ஒத்துக்கொண்ட தலைவர்கள், குறிப்பாக மருந்துகள் தொழிலில் இந்திய மற்றும் துர்க்மெனிய நிறுவனங்களுக்கிடையேயான வெற்றிகரமான கூட்டு குறித்து குறிப்பிட்டனர்.

துர்க்மெனிஸ்தான் அதிபரின் தொலைபேசி அழைப்புக்கும், இந்தியாவுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது தனிப்பட்ட உறுதிக்கும் குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x