Published : 14 Oct 2020 08:29 PM
Last Updated : 14 Oct 2020 08:29 PM

கேரளாவில் இன்று 6,244 பேருக்குக் கரோனா: அரசு தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 6,244 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக கேரள தகவல் - மக்கள் தொடர்புத் துறை அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''இன்று 7,792 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். இன்று நோய் கண்டறியப்பட்டவர்களில் 5,745 உள்ளூர்ப் பரவல் மூலமும், 364 பேர் தொற்றுக்கான ஆதாரம் இல்லாமலும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். இதுவரை கரோனா தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை 1,066 ஆகும்.

சமீபத்தில் உயிரிழந்தவர்களில் ராஜன் செட்டியார் (76), ஜினோ (62), கிருஷ்ணன்குட்டி (80), ஓமனா (68), அமலா உசெப் (67), ஜெயமதி விஜயகுமாரி (61) ஆகியோர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், சாந்தம்மா (80) மற்றும் ராதாமணி (69) ) கொல்லத்தையும், யூனஸ் குஞ்சு (69 ஆழப்புழாவையும், எம்.எஸ்.ஜான் (84), கேசவ பொத்துவல் (90 எர்ணாகுளத்தையும், சந்திரன் (50), அலிகுட்டி (87), மிசியா பாத்திமா (5 மாதங்கள்), அப்துரஹ்மான் (56), அபூபாகர் (69) மற்றும் குஞ்சன் (80) மலப்புரத்தையும் முகமது (85) மற்றும் சீடலிகுட்டி (72) கோழிக்கோட்டையும், , குமாரன் (70) கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று கரோனா வைரஸ் கண்டவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:

மலப்புரம் 1,013, எர்ணாகுளம் 793, கோழிக்கோடு 661, திருச்சூர் 581, திருவனந்தபுரம் 581, கொல்லம் 551, ஆலப்புழா 456, பாலக்காடு 364, கோட்டயம் 350, கண்ணூர் 303, கண்ணூர் 303 இடுக்கி 114 மற்றும் வயநாடு 84. தொற்று கண்டறியப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் 81 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உள்ளனர்.

தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:

மலப்புரம் 934, எர்ணாகுளம் 714, கோழிக்கோடு 649, திருச்சூர் 539, திருவனந்தபுரம் 508, கொல்லம் 527, ஆலப்புழா 426, பாலக்காடு 320, கோட்டயம் 313, கண்ணூர் 273, காசர்கோடு 213, வயநாடு 81.

மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:

திருவனந்தபுரம் 21, கோட்டயம் 4, மலப்புரம் 3, மற்றும் கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு தலா 2.

இன்றைய சோதனையில் குணமான நோயாளிகளின் மாவட்ட வாரியான விவரங்கள்:

திருவனந்தபுரம் 871, கொல்லம் 625, பத்தனம்திட்டா 321, ஆலப்புழா 574, கோட்டயம் 143, இடக்கி 155, எர்ணாகுளம் 823, திருச்சூர் 631, பாலக்காடு 449, மலப்புரம் 1,519, கண்ணூர் 436, காசர்கோடு 343. சிகிச்சையில் தற்போது, 93,837 நோயாளிகள் உள்ளனர், இதுவரை 2,15,149 பேர் கரோனா தொற்று ஏற்பட்டு குணமாகியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 2,78,989 நபர்கள், தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2,52,645 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 26,344 பேர் உள்ளனர். 2,519 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 50,056 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மொத்தம் 37,26,738 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஏழு புதிய இடங்கள் இன்று ஹாட்ஸ்பாட்களாக வரையறுக்கப்பட்டன, அதே நேரத்தில் 14 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, கேரளாவில் 653 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x