Published : 14 Oct 2020 07:47 AM
Last Updated : 14 Oct 2020 07:47 AM

2019-ம் ஆண்டு முதல் காங்கிரஸிலிருந்து விலகும் 5-வது செய்தித் தொடர்பாளர் குஷ்பு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு மார்ச் முதலே விலகி வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த டாம் வடக்கன், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். டாம் வடக்கன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமானவரான வின்சென்ட் ஜார்ஜின் ஆதரவாளர் ஆவர்.

இதைத் தொடர்ந்து 2019 ஏப்ரலில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் உ.பி.யைச் சேர்ந்தவருமான பிரியங்கா சதுர்வேதி விலகி சிவசேனாவில் சேர்ந்தார். இவர் காங்கிரஸ் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து 2019 செப்டம்பரில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான அஜோய் குமார், அக்கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடந்த செப்டம்பரில் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

4-வது நபராக கடந்த ஜூன் மாதம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, கட்சியின் செயல்பாடு குறித்தும் தலைமை குறித்தும் விமர்சனம் செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் 5-வது நபராக நடிகை குஷ்பு சுந்தர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x