Published : 15 Sep 2015 02:42 PM
Last Updated : 15 Sep 2015 02:42 PM
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவியதாக கேளராவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்து அவர்களுக்கு உதவியதாக இந்தியாவை சேர்ந்த 4 பேரை ஐக்கிய அரபு அமீரகம் நாடு கடத்தியது. கேரளாவைச் சேர்ந்த இவர்களில் இருவர் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
மற்றும் இருவரை கோழிக்கோடு விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் கேரள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல, அபுதாபியிலிருந்து இந்தியாவுக்கு பெண் ஒருவர் நாடு கடத்தப்பட்டார். இவரை ஹைதராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT