Published : 11 Oct 2020 06:58 AM
Last Updated : 11 Oct 2020 06:58 AM

6 மாநிலங்களைச் சேர்ந்த 1.3 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

மத்திய அரசின் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின்கீழ், 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங்களைச் சேர்ந்த 1.3 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்க உள்ளார்.

நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள பட்டா நிலங்கள், வீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விவ ரங்கள் மத்திய அரசிடம் இல்லை. இதனால், கிராமப்புறங்களில் பல் வேறு திட்டங்களை செயல்படுத்து வதில் சட்டச் சிக்கல் எழுவதாக கூறப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகை யிலும் சொத்துகளை நிர்வகிக்கும் கிராமவாசிகள் பயன்பெறும் வித மாகவும் ‘ஸ்வமித்வா’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். கிராமங்களில் சொந்த மாக நிலம், வீடு வைத்திருப் போருக்கு சொத்து விவர அட்டை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில், ‘ஸ்வமித்வா’ திட்டத்தில் முதல்கட்டமாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 763 கிராமங் களைச் சேர்ந்த 1 லட்சத்து 32 ஆயி ரம் மக்களுக்கு சொத்து விவர அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார்.

டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக இந்த அட்டைகளை மோடி வழங்கவுள் ளார். பின்னர், சம்பந்தப்பட்டவர் களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சொத்து விவர அட்டைகளை வழங்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் படிப்படியாக நாட் டில் உள்ள 6.62 லட்சம் கிரா மங்களுக்கும் அடுத்த 4 ஆண்டு களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கு இந்த அட்டைகளை சமர்ப்பித்தாலே போதுமானது என மத்திய அரசு கூறியுள்ளது.

வருவாய் அதிகரிக்கும்

இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் ஒருவர் கூறும்போது, ‘‘ஸ்வமித்வா’ திட்டத்தால் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது நிவாரணம் வழங்குவதிலும், மறுகுடியேற்றம் செய்வதிலும் ஏற்படும் சட்ட சிக்கல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

மேலும், அனைத்து நிலங்கள், வீடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படும். அதனால், கிராம பஞ்சாயத்து களின் வருவாய் கணிசமாக அதி கரிக்கும். இதன்மூலம் மக்கள் நலத்திட்டங்கள் அதிக அளவில் செயல் படுத்தப்படும். அதுமட்டுமின்றி, கிராமங்களில் ஆதிக்க சமூகத்தின ரால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நிலங்கள் சுரண்டப்படுவதும் முற் றிலுமாக தடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x