Published : 09 Oct 2020 08:44 PM
Last Updated : 09 Oct 2020 08:44 PM
ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் நாளை முதல் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
இன்று (2020 அக்டோபர் 9) அதிகாலை வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவானது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மீது அது மையம் கொண்டிருந்தது.
மத்திய வங்காள விரிகுடா மீது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது நாளை (2020 அக்டோபர் 10) வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அக்டோபர் 10 -ம் தேதி ஆகிய தினங்களில் குறைவானது முதல் மிதமான மழையும், ஒடிசா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவின் உட்புற பகுதிகள் மற்றும் மராத்வாடா ஆகிய இடங்களில் ஆங்காங்கே அக்டோபர் 10 அன்று மிக அதிக அளவில் மழையும் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT