கரோனாவில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி கூறிய 3 வழிமுறைகள்: மக்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

கரோனாவில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி கூறிய 3 வழிமுறைகள்: மக்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
Updated on
1 min read

கோவிட்-19-க்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் இயக்கத்தில் இணையுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கோவிட்-19 போன்ற ஒரு உலகப் பெருந்தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

எனவே, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் இயக்கத்தில் நாம் அனைவரும் இணைந்து, கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை பரப்பி, இந்தியாவை கொவிட்-19 இல்லாத நாடாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம்," என்று தெரிவித்துள்ளார்.

"கோவிட்-19 இடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்று வழிகள் தான் இருக்கின்றன. அவை முகக் கவசம் அணிதல், இரண்டு அடி தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகும்.

உங்களை மட்டுமில்லாமல் உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களை கோவிட்-19 இடம் இருந்து பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 3 அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுங்கள்," என்று உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in