Last Updated : 16 Sep, 2015 08:37 AM

 

Published : 16 Sep 2015 08:37 AM
Last Updated : 16 Sep 2015 08:37 AM

மத்தியப் பிரதேச வெடி விபத்து: சிறப்பு புலனாய்வுக் குழு நியமனம்

மத்தியப் பிரதேச வெடி விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அந்த மாநில அரசு நியமித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ஜபுவா மாவட்டம், பெடல்வாட் நகரில் கடந்த 12-ம் தேதி பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் 90 பேர் உயிரிழந் தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வணிக வளாகத்தில் ஏராள மான வெடிபொருட்களை சட்ட விரோதமாக சேமித்து வைக்கப்பட் டிருந்ததால் இந்த விபத்து நேரிட்டி ருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து 69 டெடனேட்டர்கள் மற்றும் ஏராள மான ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ள னர். இதுதொடர்பாக ராஜேந்திர கேசவா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஜபுவா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார். இதுவரை அவர் 17 கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங் களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறும்போது, “பெடல்வாட் வெடி விபத்து சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் எஸ்.பி. சீமா ஆலவா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக் கப்பட்டுள்ளது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் படுவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x