Last Updated : 27 Sep, 2015 10:36 AM

 

Published : 27 Sep 2015 10:36 AM
Last Updated : 27 Sep 2015 10:36 AM

பிஹாரில் கிரிமினல்களுக்கு எம்எல்ஏ ‘சீட்’களை விற்கிறது கட்சி தலைமை: பாஜக எம்பி ஆர்.கே.சிங் அதிரடி குற்றச்சாட்டு

பிஹாரில் பாஜக எம்எல்ஏ ‘சீட்’கள் கிரிமினல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அக்கட்சி எம்.பி. ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என பாஜக மேலிடம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக ஆர்.கே.சிங் நேற்று பாட்னாவில் கூறும்போது, “பிஹாரில் பாஜக எம்எல்ஏ சீட்கள் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களுக்கும் உண்மையான தொண்டர்களுக்கும் வழங்கப்படாமல் கிரிமினல்களுக்கு விற்கப்படுகிறது. லாலுவின் ஆட்சியை காட்டாட்சி என்று விமர்சித்து வரும் பாஜக கிரிமினல்களுக்கு சீட் கொடுத்தால், லாலுவின் கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

கட்சியில் சேர்வதற்கு முன்பாகவே கிரிமினல்களுக்கு சீட் தரப்படுகிறது. இது பிஹார் மக்களுக்கு இழைக்கப்படும் பச்சை துரோகம், அநீதியாகும். சிலர் தங்களுக்கு கிடைத்த சீட்களை விற்பனை செய்துள்ளனர். இப்படி செய்தால் எப்படி தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை தரமுடியும்?” என்றார்.

முன்னாள் உள்துறை செயலரான ஆர்.கே.சிங், பிஹாரின் ஆரா தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது புகார் கட்சி மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை அளித்துள்ளது. என்றாலும் பிஹார் தேர்தலுக்கு முன் அவர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மறுப்பு

இதனிடையே ஆர்.கே.சிங் புகாரை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.

“பிஹாரில் அனைத்து அம்சங் களையும் ஆராய்ந்த பிறகு நியாய மான முறையிலேயே சீட்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, “ஆர்.கே.சிங் கருத்து துரதிருஷ் டவசமானது. அடிப்படையற்ற இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். கட்சியின் மதிப்பிற்குரிய எம்.பி. அவர். என்றாலும் அவர் கட்சியை நன்கு அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x