Published : 03 Sep 2015 08:33 AM
Last Updated : 03 Sep 2015 08:33 AM
திருப்பதியில் வரும் 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ பாது காப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பேசும்போது, “திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் பணியாற்றுவதையே பெரும் பாக்கியமாக கருத வேண்டும். நாம் செய்யும் பணியே கடவுள் என முன்னோர்கள் கூறி உள்ளனர். அதுபோன்று பக்தர்களுக்கு பாதுகாப்புடன் சிறந்த சேவையும் அளிக்க வேண்டும். பக்தர்களை குற்றவாளிகள் போல் பார்க்காமல் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT