Published : 23 Sep 2015 09:38 AM
Last Updated : 23 Sep 2015 09:38 AM
பிஹாரில் எனது கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் நிதிஷ்குமார் தான் முதல்வராக பதவியேற்பார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்த அணியில் உள்ள காங்கிரஸ் எஞ்சிய 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் நேற்று டெல்லியில் கூறும்போது, “எங்கள் மதச்சார்பற்ற மகா கூட்டணியில் முதல்வர் வேட்பா ளராக நிதிஷ்குமார் அறிவிக்கப் பட்டுள்ளார். எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி நிதிஷ்குமார் தான் முதல்வராக பதவியேற்பார். பிஹாரில் பாஜகவை முற்றிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் முகமூடிதான் பாஜக. எனவே எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பாஜக ரத்துசெய்ய விரும்புவதையே இது காட்டுகிறது. ஆனால் என்ன நேர்ந்தாலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT