Published : 03 Oct 2020 01:08 PM
Last Updated : 03 Oct 2020 01:08 PM

இந்தியா- வங்கதேச கடற்படைகள் கூட்டு பயிற்சி

இந்தியா-வங்கதேச கடற்படைகளின் 2வது கூட்டு பயிற்சி வடக்கு வங்க கடல் பகுதியில் தொடங்கியது.

‘பாங்கோசாகர்’ என்ற பெயரில் இந்தியா, வங்கதேசம் கடற்படைகள் இடையே கடந்தாண்டு முதல் கூட்டு பயிற்சி தொடங்கியது.

இரு நாடுகள் இடையேயான 2வது கூட்டு பயிற்சி வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை தொடங்கியது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கில்டன், குக்ரி போர் கப்பல்களும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் பங்கேற்றுள்ளன. இதே போல் வங்க தேச போர்க்கப்பல்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றன.

இந்த கூட்டு பயிற்சி முடிந்த பின் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ரோந்து பயிற்சிகள் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கின்றன. சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்து பணியில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இந்த கூட்டு ரோந்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x