Published : 01 Oct 2020 07:13 PM
Last Updated : 01 Oct 2020 07:13 PM

காற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி

வட இந்தியாவில், குறிப்பாக தேசிய தலைநகர் பகுதியில், கடந்த சில வருடங்களாக நீடித்து வரும் காற்று மாசு குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தலைமை தாங்கினார்.

பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், காற்று மாசை கட்டுப்படுத்த இன்னும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆய்வு கூட்டம் பயனுள்ள வகையில் நடந்ததாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் காற்று மாசை கட்டுப்படுத்த ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

வைக்கோலை எரிப்பதன் மூலம் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து உள்ளதாக அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x