Published : 27 Sep 2020 07:58 AM
Last Updated : 27 Sep 2020 07:58 AM

நிதிஷ் குமாரை சந்திக்க குவிந்த கட்சி பிரமுகர்கள்

பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரை சந்திப்பதற்காக பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று குவிந்தனர். படம்: பிடிஐ

பாட்னா

பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நீடிக்க பாஜகவும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன்படி, நிதிஷ் குமாரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பதற்காக பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x