Published : 04 Sep 2015 09:47 AM
Last Updated : 04 Sep 2015 09:47 AM

புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறோம்: மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைகளை வரவேற் கிறோம் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டெல்லியில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, “புதிய கல்விக் கொள்கை குறித்து சிபிஎஸ்இ ஆசிரி யர்கள், மாணவர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக் கலாம். அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

விழாவில் நாடு முழுவதும் இருந்து 34 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு கொண்டதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x