Published : 24 Sep 2020 12:02 PM
Last Updated : 24 Sep 2020 12:02 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்தது; 46 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: 91 ஆயிரமாக அதிகரித்த உயிரிழப்பு

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86 ஆயிரத்து 508 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 57 லட்சத்து 32 ஆயிரத்து 519ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்குப் பின் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 75 ஆயிரமாக குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், இம்மாதம் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும் எட்டியது. இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 81.75 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,129 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 91 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 66 ஆயிரத்து 382 ஆகக் குறைந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x