Published : 05 Sep 2015 09:15 AM
Last Updated : 05 Sep 2015 09:15 AM
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் அமைந்துள்ள வீலர் தீவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாம் பெயரை வீலர் தீவுக்கு சூட்டுவதால் இளைஞர்களிடம் அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என தான் நம்புவதாக பட்நாயக் தெரிவித்துள்ளார். விஞ்ஞானியான அப்துல் கலாம் ஒடிசா மீது பரிவு காட்டியவர்.
கலாம் வேண்டுகோளின் காரணமாக அப்போது முதல்வராக பிஜு பட்நாயக் இருந்தபோது வீலர் தீவு ஏவுகணை சோதனைக்காக 1993-ல் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
ஒடிசா கடற்கரை அருகே அமைந்துள்ள வீலர் தீவில் ஏவுகணைகள் ஏவி சோதனையிடப் படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT