Published : 23 Sep 2020 10:58 PM
Last Updated : 23 Sep 2020 10:58 PM

மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி

கரோனா தொற்றுக்கு ஆளான ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று காலமானார். அவருக்கு வயது 65.

பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு தலைவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதி எம்.பியான சுரேஷ் அங்காடி, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் அங்காடிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆவார். சுரேஷ் அங்காடி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x