Published : 20 Sep 2020 12:56 PM
Last Updated : 20 Sep 2020 12:56 PM

3 விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் கடை சரக்காகி விடுவார்கள்: டி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை

3 விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளை அழித்து விடும், அவர்களை கடை சரக்காக்கி விடும் என திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:

‘‘நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீத பங்களிப்பை அளிக்கும் விவசாயிகள் நிலையை இந்த மசோதாக்கள் மோசமாக்கி விடும். விவசாயிகளை இந்த மசோதா அடிமையாக்கி விடும். விவசாயிகளை அழித்து விடும் அவர்களை கடை சரக்காக்கி விடும். எனவே இந்த மசோதாவை அனுமதிக்க முடியாது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x