Published : 19 Sep 2020 07:12 PM
Last Updated : 19 Sep 2020 07:12 PM

விவசாய மசோதாக்களுக்கு ஆதரவு; ஹரியாணாவில் விவசாயிகள் பேரணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய மசோதாக்களுக்கு ஆதரவாக ஹரியாணாவில் விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய மசோதாக்களுக்கு ஆதரவாக ஹரியாணாவில் விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர். ரோதக் நகரில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். விவசாய மசோதாக்களை ஆதரித்து அவர் பதாகைகளை சுமந்தபடி சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x