Last Updated : 18 Sep, 2020 12:05 PM

 

Published : 18 Sep 2020 12:05 PM
Last Updated : 18 Sep 2020 12:05 PM

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்  உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி

ஐஎஸ்ஆர்ஓ. எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காதபோது ஐஎஸ்ஆர்ஓ-வில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஐஎஸ்ஆர்ஓவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் 500 நிறுவனங்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் செயல்படும் பரந்துபட்ட பகுதிகள், பிரிவுகள் பொருட்களையும், இயந்திர வடிவமைப்புகளையும், மின்னணு வடிவமைப்புகளையும், சிஸ்டம் மேம்பாடுகளையும், ஒருங்கிணைப்புகளையும் வழங்குகின்றன.” என்றார்.

விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசின் இந்த முடிவை விஞ்ஞானிகளும் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x