Published : 17 Sep 2020 07:22 PM
Last Updated : 17 Sep 2020 07:22 PM

கரோனா; சிகிச்சை முடிந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா

கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.

எனினும் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு லேசான உடல் சோர்வும், உடல் வலியும் இருந்ததால் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக மீண்டும் எய்ம்ஸ் மரத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாகக் குணமடைந்ததை தொடர்ந்து அமித் ஷா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x