Published : 17 Sep 2020 07:56 AM
Last Updated : 17 Sep 2020 07:56 AM

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட `டாடா’வுக்கு அனுமதி

டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான டெண்டரில் டாடா நிறுவனம் வெற்றி பெற்றது. மொத்தம் ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் அமைய உள்ளது.

மத்திய அரசின் பொதுப்பணித் துறை இந்த வளாகம் கட்டுவதற்கு ரூ. 940 கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவாக டெண்டர் கேட்பு மனு தாக்கல் செய்த டாடா நிறுவனத்துக்கு நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தனது டெண்டர் கேட்பு மனுவில் ரூ. 865 கோடி குறிப்பிட்டிருந்தது. அதைவிட குறைவான தொகை கோரியிருந்ததால் டாடா புராஜெக்ட் நிறுவனத்துக்கு இத்திட்டப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x