Published : 16 Sep 2020 03:23 PM
Last Updated : 16 Sep 2020 03:23 PM

கரோனாவில் இருந்து ஒரே நாளில் 82,961 பேர் மீண்டனர்

ஒரே நாளில் கோவிட்-19 தொற்றிலிருந்து 82,961 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் தொடர்ந்து அதிகரிக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 82,961 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 78.53% ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,42,360 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (19423), ஆந்திரப் பிரதேசம் (9628), கர்நாடகம் (7406) , உத்தரப் பிரதேசம் (6680), தமிழ்நாடு (5735)ஆகிய மாநிலங்களில் இருந்து 35.5% பேர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களும் இந்த மாநிலங்களில் தான் சுமார் 60% பேர் உள்ளனர்.

நாட்டில் தற்போது, 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி 29 லட்சத்தை கடந்துவிட்டது. சிகிச்சை பெறுபவர்களை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x