Published : 16 Sep 2020 07:54 AM
Last Updated : 16 Sep 2020 07:54 AM

10,000 பேரை சீனா கண்காணிக்கும் விவகாரம் ஒத்திவைப்பு: தீர்மானம் கோரி காங். நோட்டீஸ்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் இந்தியர்களை சீன அரசும் அந்நாட்டு ராணுவமும் கண்காணிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸை அளித்தனர்.

இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை சீனா கண்காணிப்பதாக செய்தி வெளியான நாளிதழை மக்களவையில் மாணிக்கம் தாகூர் காட்டினார். இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அவரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் வலியுறுத்தினர். சீனாவின் நோக்கத்தை தடுக்க கணினி, இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x