Published : 14 Sep 2020 01:33 PM
Last Updated : 14 Sep 2020 01:33 PM

கரோனா  தொற்று; இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 78 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, 78 சதவீதத்தை தொட்டுள்ளது

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை மைல்கல் ஒன்றை இன்று தொட்டுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் குணமடைந்தவர்கள் விகிதம், 78 சதவீதத்தை தொட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சம் அதிகமாகும்

அதிக பாதிப்புகளை கண்டுள்ள 5 மாநிலங்களில் இருந்து மொத்த பாதிப்புகளில் 60 சதவீதம் பதிவாகியுள்ளன

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,512 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,80,107 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,86,598 ஆக உள்ளது.

மத்திய அரசின் கவனம் மிகுந்த, திட்டமிட்ட & திறன்மிகு உத்திகள் அதிக குணமடைதல்களுக்கும், குறைவான இறப்பு விகிதத்துக்கும் (1.65%) காரணமாகியுள்ளன.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x