

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டபின்பும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், உடல்வலி, தொண்டை வலி,மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கும் சென்று வருகின்றனர்.
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அதன்பின் கரோனாவின் தாக்கங்கள் உடலில் நீண்டகாலம் இல்லாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும், உணவுகள், மருந்துகள் குறித்த விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி தனிநபர் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டநிலையில் அவர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.