Published : 09 Sep 2015 08:14 AM
Last Updated : 09 Sep 2015 08:14 AM
இந்தியாவில் ஒயின் உற்பத்தி அடுத்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2018-ம் ஆண்டில் 2.10 கோடி லிட்டராக உயரும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஒயின் உற்பத்தி 1.7 கோடி லிட்டராக இருந்தது.
உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 5 சதவீதம் அதிகரித்து வருகி றதாக அசோசேம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இப்போது ஆண்டுக்கு ஒயின் நுகர்வு 2.2 கோடி லிட்ட ராக உள்ளது. இது 2018-ம் ஆண்டில் 3.7 கோடி லிட்டராக அதிகரிக்கும். இது கடந்த ஆண்டு 1.8 கோடி லிட்டராக இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் ஒயின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் இந்தி யாவில் உற்பத்தி ஆலை அமைப் பதில் தீவிரம் காட்டுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒயின் தொழில் துறையும் வளர்ச்சி மற்றும் அத்துறை எதிர்நோக்கும் சவால் கள் என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் ஒயின் இறக்குமதி அதி கரிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் இளைஞர் சமுதாயம் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு ஆகியவற்றோடு இந்தி யாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் இந்திய ஒயின் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் உள்ள 125 கோடி மக்கள் தொகை யில் 2.65 கோடி பேர் ஒயின் அருந்துபவர்களாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT