Published : 09 Sep 2020 09:50 PM
Last Updated : 09 Sep 2020 09:50 PM

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்; வெங்கய்ய நாயுடு ஆய்வு

கோப்புப் படம்

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு ஆய்வு செய்தார்.

செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கய்ய நாயுடு இன்று ஆய்வு செய்தார்.

சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ள இருக்கை ஏற்பாடுகளோடு, செயலகத்தின் பணியாளர்களைக் கொண்டு திரு நாயுடு தலைமையில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

ஒலி ஒளி அமைப்புகள், வாக்கெடுப்பு முறை, சமூக இடைவெளி நடைமுறைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. அதிகாரிகளிடையே பேசிய குடியரசு துணைத் தலைவர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பும் கலந்துகொள்ளும் போதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுரை கடிதமொன்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்புமாறு அதிகாரிகளை நாயுடு கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x