Published : 08 Sep 2020 01:24 PM
Last Updated : 08 Sep 2020 01:24 PM
கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
ஆகஸ்ட் மாதத்தில், வடக்கு வங்கக்கடலில் ஐந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருந்தன என்றும் அந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 27 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகின.
ஆகஸ்ட் மாதத்தில், வழக்கமான மழை பொழிவை விட, 27 சதவீதம் அதிக மழை இருந்தது. ஒடிசா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அடுத்த நான்கு நாட்களுக்கு கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பரவலாக பெய்யக்கூடும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT