Last Updated : 08 Sep, 2020 09:22 AM

 

Published : 08 Sep 2020 09:22 AM
Last Updated : 08 Sep 2020 09:22 AM

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ராகினி திவேதிக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல்

ராகினி திவேதி

பெங்களூரு

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நவி மும்பையில் போதைப் பொருள் விற்பனை செய்த ஹெச்.ஏ.சௌத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், நடிகை ராகினி திவேதி உட்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காட்டன்பேட்டை போலீஸார் சிவ பிரகாஷை முதல் குற்றவாளியாகவும், நடிகை ராகினி திவேதியை 2-ம் குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர். ராகினி திவேதியின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, பெங்களூரு மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ராகினியின் காவலை 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என போலீஸார் கோரினர். இதையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள தொழிலதிபர் நியாஸ் உள்ளிட்ட 5 பேரை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.ராகினி திவேதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x