Published : 06 Sep 2020 08:32 AM
Last Updated : 06 Sep 2020 08:32 AM

உ.பி. சார்பில் பாஜகவின் ஜபர் இஸ்லாம் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

லக்னோ: உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த அமர் சிங் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு செப்டம்பர் 11-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும். பாஜக சார்பில் சையது ஜபர் இஸ்லாம் மனு தாக்கல் செய்திருந்தார். பாஜகவைச் சேர்ந்த கோவிந்த் நரேன் ஷுக்லா, சுயேச்சை வேட்பாளர் மகேஷ் சந்திரா ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அடுத்த நாளே கோவிந்த் நரேன் ஷுக்லா தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதே நேரத்தில் சர்மாவின் வேட்பு மனுவில் 10 பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவரது மனுவில் 10 எம்எல்ஏ-க்கள் கையெழுத்து போடாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

கடைசி நாள் வரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஜபர் இஸ்லாம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் என்று தேர்தல் அதிகாரி பிரிஜ்பூஷண் துபே தெரிவித்தார். ஜபர் இஸ்லாம், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக 2022-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வரை இருப்பார். மாநிலங்களவை எம்.பியாக இஸ்லாம் தேர்வானதற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x