Published : 06 Sep 2020 07:23 AM
Last Updated : 06 Sep 2020 07:23 AM

கரோனா தொற்றுக்கு தடுப்பூசி ரஷ்யாவுக்கு ராஜ்நாத் பாராட்டு

ராஜ்நாத் சிங்

மாஸ்கோ

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் கடந்த மாதம் அறிவித்தார். தனது மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி ஏற்கெனவே செலுத்தப்பட்டதாகவும் இந்த தடுப்பூசி திறம்பட செயலாற்றுவதாகவும் நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசும்போது, “கரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக நிர்வகித்து வரும் ரஷ்ய அரசு மற்றும் ரஷ்ய மக்களை பாராட்டுகிறேன். கரோனா தொற்றுக்கு தடுப்பூசி பணிகளை முன்னெடுத்துச் செல்லும் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார ஊழியர்களை பாராட்டுகிறோம். இந்த தொற்று காலத்தில் நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தையும் வெற்றிகளையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

ரஷ்ய அரசு தனது 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசி தயாரிப்பில் ஒத்துழைப்பு கோரி இந்தியாவை அணுகியுள்ளது. தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை தற்போது மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x