Published : 06 Sep 2020 07:19 AM
Last Updated : 06 Sep 2020 07:19 AM

கொச்சியில் கட்டப்பட்டு வரும் கப்பலில் கம்ப்யூட்டரின் பாகங்களை திருடிய இருவர் கைது

புதுடெல்லி

கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்காக புதிய போர்க் கப்பல் கட்டப்பட்டு வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பலான இதற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து கடந்த ஆண்டு தேசப் பாதுகாப்பு தொடர்பான கம்ப்யூட்டர் பாகங்கள் திருடு போனது. இது தொடர்பான வழக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. பல மாநிலங்களில் 9 மாத கால விரிவான விசாரணைக்கு பிறகு பிஹாரை சேர்ந்ச சுமித்குமார் சிங் (23), ராஜஸ்தானைச் சேர்ந்த தயாராம் (22) ஆகிய இருவரை என்ஐஏ கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளது.

இவர்கள் கப்பலில் பெயின்டர்களாக கடந்த செப்டம்பர் வரை வேலை பார்த்தனர். பிறகு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். என்ஐஏ விசாரணையில் பணத்துக்காக கம்யூட்டர் பாகங்களை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x