Last Updated : 19 Sep, 2015 10:07 AM

 

Published : 19 Sep 2015 10:07 AM
Last Updated : 19 Sep 2015 10:07 AM

சீர்திருத்த இல்லத்தில் இருந்து 19 சிறுவர்கள் தப்பியோட்டம்

உத்தரப்பிரதேசத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 19 சிறுவர் களை ஆயுதமேந்திய 2 இளைஞர் கள் நேற்று தப்பிக்கச் செய்தனர்.

மதுரா நகரின் கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஆயுதமேந்திய 2 இளைஞர்கள் இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்துள்ளனர். பின்னர் இவர்கள் கதவுகளை உடைத்து சிறுவர்களை தப்பிக்கச் செய்துள்ளனர். இதை தடுக்க முன்ற காவலர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் விரைந்த போலீஸார் 3 பேரை தவிர மற்றவர்களை ஆங்காங்கே சுற்றிவளைத்து பிடித்தனர். பூஜா, அவரது 2 வயது குழந்தை வைஷவி, ஷில்பி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இவர்களையும் அந்த இளைஞர்களையும் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x