Published : 04 Sep 2020 05:54 PM
Last Updated : 04 Sep 2020 05:54 PM

உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு கோரி மனு: மாவட்ட நீதிபதிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

போதிய அனுபவம் இருந்தும் தங்களை மாவட்ட நீதிபதிகள் பதவியிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு பரிந்துரைக்காததை எதிர்த்து தமிழகத்தின் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

உரிய தகுதி இருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக தங்களை பரிந்துரைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பூர்ணிமா, தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கே.ராஜசேகர், சென்னை குடும்பநல நீதிமன்ற முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ.ரகுமான்,
தமிழகத்தின் மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், ஏ.காந்தகுமார், ஏ.நசீமா பானு, எம்.டி.சுமதி மற்றும் எம்.சுரேஷ் விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது முன்சீப், மாஜிட்ரேட், மாவட்ட நீதிபதி என 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.


ஆனால் தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் மற்றும் கடந்த 2017 ஆண்டின் படி 6 ஆண்டுகள் மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்த அனுபவம் உள்ளது.

ஆனால் தங்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க கொலிஜியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைக்கவில்
லை மாறாக தங்களை விட அனுபவம் குறைந்த ஜூனியர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட குழு கொலிஜியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது
.

ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் தீர்ப்பாயம், நடுவர்மன்றம், மாவட்ட நீதிபதி என பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தவறான விளக்கத்தை எடுத்து கொண்டு தங்களை விட அனுபவம் குறைந்தவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரையை செய்துள்ளனர்.

எனவே வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக இருந்த இரு காலகட்டத்தையும் சேர்த்து 10 ஆண்டுகள் அனுபவமாக கணக்கிட்டு தங்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரைக்க வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக மாவட்ட நீதிபதிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு தொடர்பான அனுபவ விதிமுறைகளை முழுவதுமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுஇந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x