

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமையன்று சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் அதில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பட்டான் பகுதியில் எதிபோரா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் இன்று ஈடுபட்டனர்.
இந்தத் தேடுதல் வேட்டை பிறகு சண்டையாக மாறியது. தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். படையினரும் பதிலடி கொடுத்தனர்.
முதற்கட்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது, கூடுதல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், இது குறித்த மேல் விவரங்கள் இனிதான் வெளியாகும்.