

கரோனா தொற்றை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.6 மடங்கு அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் குணமடைந்த நிலையில், குணமடைதல்களில் புதிய சிகரத்தை இந்தியா எட்டியது.
ஒரே நாளில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் என்னும் சாதனையைத் தொடர்ந்து, இன்னொரு சிகரத்தை இந்தியா தற்போது எட்டிப் பிடித்துள்ளது.
அதாவது, ஒரு நாளில் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் இது வரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 68,584 பேர் இந்தியாவில் கோவிட்-19-இல் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம், இது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தை எட்டியுள்ளது (2,970,492). மேலும், இந்தியாவின் குணமடைதல் விகிதம் 77 சதவீதத்தை தாண்டியுள்ளது.
தற்போதைய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.6 மடங்கு அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11.7 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் (11,72179) செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.5 கோடியை கடந்துள்ளது (4,55,09,380).