Published : 24 Aug 2020 09:04 AM
Last Updated : 24 Aug 2020 09:04 AM

எனது எச்சரிக்கையை கணவர் மறுத்தார்: கைதான தீவிரவாதி மனைவி தகவல்

புதுடெல்லி

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரோல் பாக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தி அபு யூசுப் என்ற தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் டெல்லியில் குக்கர் வெடிகுண்டு வைக்க முயன்றதும் தெரியவந்தது. உ.பி.யில் பல்ராம்பூர் மாவட்டம் பத்யா பக்க்ஷி கிராமத்தில் அபு யூசுப்பின் வீட்டுக்கு டெல்லி போலீஸார் சனிக்கிழமை அவரை கூட்டிச் சென்று சோதனையிட்டனர். அங்கிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதி அபு யூசுப்பிடம் டெல்லி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, அபு யூசுப்பின் மனைவி கூறும்போது, ‘‘வீட்டில் வெடிமருந்துகளை பதுக்கி வைப்பது குறித்து எனது கணவரை எச்சரித்தேன். இந்த செயலை நிறுத்துமாறு கூறினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனது கணவரை மன்னித்து விடுவிக்க வேண்டும். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான் எங்கு செல்வேன்?’’ என்றார்.

அபு யூசுப்பின் தந்தை கபீல் அகமது கூறும்போது, ‘‘எனது மகன் மிகவும் நல்லவன். அவன் தீவிரவாதியாக இருப்பான் என்று கற்பனை செய்ய முடியவில்லை. அவன் வெடிபொருட்களை வீட்டில் பதுக்கியது எனக்குத் தெரியாது. போலீஸார் வந்து வெடிபொருட்களை கண்டுபிடித்த பிறகுதான் எனக்குத் தெரியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x